தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய இரண்டு படங்களும் நெல்சனுக்கு ஹிட்டாக அமைந்த நிலையில், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியடைந்தது. என்றாலும் அதையடுத்து ரஜினி நடிப்பில் அவர் இயக்கி உள்ள ஜெயிலர் படம் ஹிட் அடித்துள்ளது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ரஜினி - விஜய் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய நான்கு படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அதை விரைவில் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார் நெல்சன். மேலும், விஜய்- அஜித்தை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சனும் கூறி இருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.