தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி. சில சீரியகளிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட கல்யாணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து தற்போது நலமாக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த காலகட்டத்தில் நான் மன உளைச்சலுடன் இருந்தேன். கணவர் குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் உடல் உபாதையால் அவதிப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை வைத்து சிலர், நடிகை கல்யாணி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பது போன்று மார்பிங் செய்த போட்டோக்களை பதிவிட்டு தவறான தகவல்களை பரப்பி வந்தார்கள். இதையடுத்து உடனடியாக இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள நடிகை கல்யாணி, இன்னொருவரின் உடலில் என்னுடைய முகத்தை மார்பிங் செய்து தவறான செய்திகளை பதிவு செய்கிறார்கள். நான் உடல் நலம் இல்லாத போது மனரீதியில் எனது பிரச்சனை குறித்து தான் பேசியிருந்தேன். ஆனால் என்னை பற்றி தவறான வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். தயவு செய்து இது போன்ற செய்திகளை யாரும் சோசியல் மீடியாவில் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை கல்யாணி.