இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மாமன்னன்'. இந்த படத்தின் 50வது தின கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் பேசிய இப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛‛இந்த படத்தின் கதை 30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம். இசையால் என்னால் அதை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. அதனால் படமாக செய்ய முடிந்தவருடன் இணைந்து பணியாற்றினேன். இந்த படம் இவ்வளவும் தூரம் வந்ததற்கான முக்கிய காரணம் வடிவேலு தான். படத்தில் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் வடிவேலு செல்லும் காட்சி என்னை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்'' என்றார்.