தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. ‛வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் ‛காளி' படத்தை இயக்கினார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயம் ரவியை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இறைவன், சைரன் படங்களை முடித்துவிட்டு சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.