திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛குஷி'. காதலர்கள் திருமணத்திற்கு பின் இல்வாழ்க்கையில் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை கூறும் படமாக உருவாகி உள்ளது. தெலுங்கு, தமிழில் செப்., 1ம் தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டி...
அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்கள் உங்களுக்கு மிகப்பெரிய திருப்பம் கொடுத்தது. அதுபற்றி...?
இரண்டுமே நல்ல படங்கள். ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுமாதிரி பல படங்கள் பண்ண ஆசை.
எப்போது நேரடி தமிழ் படம் நடிப்பீங்க...?
2 தமிழ் இயக்குனர்களிடம் பேசி உள்ளேன். அடுத்து எந்த மொழியில் பண்ண போறேன் என்று தெரியவில்லை. குஷி ரிலீஸிற்கு பின் இரண்டு, மூன்று படங்கள் உள்ளன. அதன்பின் தமிழ் இயக்குனர்களுடன் வேலை பார்ப்பேன்.
குஷி படத்தில் சமந்தாவுடன் நடித்த திருமணக்காட்சி பார்த்து பெற்றோர் என்ன சொன்னாங்க, எப்போ உங்களுக்கு திருமணம்...?
எங்களுக்கு வயசு ஆகுது... எப்போ திருமணம் செய்ய போற என என் பெற்றோரும் திருமணம் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கும் ஆசை தான். ஆனால் உடனே இல்லை. எப்போது திருமணம் செய்ய வேண்டும் என நான் தான் முடிவு எடுக்கணும். என் உறவினர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் அவர்கள் என் திருமணத்தை வைத்து கொண்டாட பார்க்கிறார்கள். இப்போதைக்கு என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அப்பா - அம்மாவிற்கு 60ம் கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன். அவர்களும் சந்தோஷப்படுவார்கள்.
இவ்வாறு கூறினார்.




