திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழில் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து வந்தாரோ, அதே போல தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உயர்ந்து வந்தவர் சிரஞ்சீவி. இருவரது வளர்ச்சியும் ஒரே கால கட்டத்தில்தான் அமைந்தது. இருப்பினும் வசூல் விஷயத்தில் சிரஞ்சீவியை எப்போதுமே மிஞ்சுபவர் ரஜினிகாந்த்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து அது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மட்டும் இதுவரையிலும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலும் 35 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்து இரு மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.
அதே சமயம் சிரஞ்சீவி நடித்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'போலா ஷங்கர்' படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தப் படத்தின் உலக அளவிலான மொத்த வசூலே 45 கோடியைத் தாண்டவில்லையாம். உலக அளவில் சுமார் 80 கோடிக்கு விற்பனையான இப்படம் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்த போதும் சிரஞ்சீவி தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான 157 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிம்பிசாரா' படத்தை இயக்கிய வசிஷ்டா அந்தப் படத்தை இயக்க உள்ளார்.