வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாவதால் நாகசைதன்யாவும், இயக்குனரும் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களோடு பழகி தங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நாயகிக்கும், நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவ பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.