இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் 69வது இந்திய திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இத்தனை வருடங்களில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்கிற பெருமையும் இதனுடன் சேர்ந்துள்ளது.
பொதுவாகவே கலைப் படைப்பில் நடித்த நடிகர்களுக்குத் தான் பெரும்பாலும் தேசிய விருது வழங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் புஷ்பா என்கிற கமர்ஷியல் படத்தில் புஷ்பராஜ் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பு அதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “புஷ்பராஜூக்கு (அல்லு அர்ஜுன்) தேசிய விருது மட்டுமல்ல, எல்லா விருதுகளும் நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் முதலில் வருத்தப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்” என்று உற்சாகமாக பேசி இருந்தார். அவர் சொன்னபடி தற்போது அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டது. இதனால் தற்போது ராஷ்மிகா பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.