ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது 'புஷ்பா' தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. 'புஷ்பா' திரைப்படம் செம்மரக் கடத்தலைப் பற்றிய ஒரு படம். படத்தில் அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒரு சமூக விரோதி கதாபாத்திரம். செம்மரங்களைக் கடத்துவது, ஆட்களைக் கொல்வது, காவல் துறையை எதிர்ப்பது என ஒரு முழு 'கிரிமினல்' கதாபாத்திரம். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்குவதா என சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
ஆனால், கிரிமினல் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கூட அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
1987ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான 'நாயகன்' படத்தில் மும்பை தாதாவாக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை விட சிறந்த நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 'சாகர சங்கமம், ஸ்வாமி முத்யம்' ஆகிய படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
1994ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான 'பண்டிட் குயின்' படத்தில் கொள்ளைக்காரி பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சீமா பிஸ்வாஸ் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதைப் பெற்றார்.
1997ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமான 'களியாட்டம்' படத்தில் மனைவியைக் கொன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சுரேஷ் கோபி தேசிய விருதைப் பெற்றார்.
அந்தக் காலங்களில் அதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகப் பேசவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், தற்போது யு டியுப், சமூக வலைத்தளங்கள், டிவி விவாதங்கள் என பலவற்றில் 'புஷ்பா' படத்தில் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.