நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்கள் இப்போது மாறிவிட்டனர். ஆனால், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், இதுவரை சீரியலை விட்டு விலகவில்லை. அவர் தான் சீரியலுக்கு ஒரு முக்கிய ப்ளாஸாக உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்ததன் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாக அண்மையில் முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தயாரிப்பு தரப்பினர், சுஜிதா விலகினால் சீரியல் நன்றாகவே இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் சுஜிதாவிடம் சமாதானம் பேசி இதுவரை பேசப்பட்ட சம்பளத்தை விடவும் அதிக தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவை சுஜிதா கைவிட்டுவிட்டதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.