படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல், தற்போது மீண்டும் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களாக இயக்கி வருவதாலும் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருவதாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நபராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தையும் இவர் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதால் இது அடுத்து அவர் இயக்க உள்ள படத்திற்கான கதை விவாதத்திற்காக இங்கே வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அங்கு இருந்த தகவல் அறிந்து ரசிகர் கூட்டம் ஹோட்டலில் பெரிய அளவில் கூடியது.
அவர் கிளம்பும் தினத்தன்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் லியோ பட அப்டேட் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் முண்டியடித்ததால் அங்கிருந்து அவரது காரில் கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினார் லோகேஷ் கனகராஜ். பின்னர் தொடர்ந்து வந்த தனது காருக்கு மாறிக்கொண்டார்.
இதற்கு முன்னதாக முதல் நாளன்று இரவு புதுச்சேரி பீச்சில் வாக்கிங் சென்றார் லோகேஷ் கனகராஜ். அப்போதும் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருக்கு பாதுகாப்பாக ஐந்து பவுன்சர்கள் வந்திருந்தாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வாக்கிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.