ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார் என்பவர் தனது படத்தின் கதாநாயகியை பொது மேடையில் முத்தமிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா, கோபிசந்த், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எஸ் ரவிக்குமார். தற்போது அவரது இயக்கத்தில் திரிகபதாரா சாமி என்கிற படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடிக்க, கதாநாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகி மன்னரா சோப்ரா பேசி முடித்ததும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த இயக்குனர் ரவிக்குமார் கதாநாயகிக்கு எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் திடீர் அதிர்ச்சிக்கு மன்னரா சோப்ரா ஆளானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சமாளித்தார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுவெளியில், அதுவும் ஒரு நடிகையின் அனுமதியின்றி ஒரு இயக்குனர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்று அவருக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.