விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார் என்பவர் தனது படத்தின் கதாநாயகியை பொது மேடையில் முத்தமிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா, கோபிசந்த், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எஸ் ரவிக்குமார். தற்போது அவரது இயக்கத்தில் திரிகபதாரா சாமி என்கிற படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடிக்க, கதாநாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகி மன்னரா சோப்ரா பேசி முடித்ததும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த இயக்குனர் ரவிக்குமார் கதாநாயகிக்கு எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் திடீர் அதிர்ச்சிக்கு மன்னரா சோப்ரா ஆளானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சமாளித்தார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுவெளியில், அதுவும் ஒரு நடிகையின் அனுமதியின்றி ஒரு இயக்குனர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்று அவருக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.