அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வடசென்னை அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் தேவா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "தனுஷ் இயக்கும் புதிய படத்தில் என்னை வில்லனாக நடிக்க அழைத்தார். எப்படி என்னை நம்பி நடிக்க கூப்புடுறீங்க என கேட்டேன். அதற்கு தனுஷ் உங்க அளவுக்கு யாரும் வடசென்னை பாஷை பேச முடியாது என்று கூறினார். ஆனால், நான் பாடல்கள் பாடும் போதே நோட்ஸ் இல்லாமல் பாட முடியாது. என்னால் நீங்கள் சொல்லும் வசனங்களை ஞாபகம் வச்சி பேச முடியாது. என்னால் மத்தவங்களுக்கு சிரமமா இருக்கும்னு என வேணாம்னு சொல்லிட்டேன்" என தெரிவித்துள்ளார்.