ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல நடிகை ராதிகாவின் தங்கை நிரோஷா. மணிரத்னம் இயக்கிய 'அக்னி நட்சத்திரம்' படத்தில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராம்கி இணைந்த கைகள், செந்தூர பூவே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பார்சன் என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்த வீடு தொடர்பாக அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்களது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.