தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகராக இருந்து தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “டெங்கு, கொரோனாவை ஒழித்தது போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன.
இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். ஆனாலும் மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள். மதியுங்கள், நேசியுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.