திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகராக இருந்து தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “டெங்கு, கொரோனாவை ஒழித்தது போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன.
இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். ஆனாலும் மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள். மதியுங்கள், நேசியுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.