அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? |
முன்பெல்லாம் நடிகர் சித்தார்த், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் . அந்த கட்சியினர் என்ன ஒரு கருத்து வெளியிட்டாலும் உடனடியாக தனது சார்பில் அதற்கு எதிர் கருத்து வெளியிடுவார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் சித்தார்த்துக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுவதை நிறுத்திவிட்டார் சித்தார்த்.
இப்படியான நிலையில், நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்கத்தான் விழிப்புணர்வு பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதை அடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்தியாவின் பெயர் பாரத் என மாற்ற இருப்பதாக கூறப்படுகிறதே என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டபோது, அதற்கு சித்தார்த், நாள் இப்போது இந்தியாவில் உள்ள சென்னையில் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் இதைப் பற்றி பேசுவோம். இங்கு வந்து, யார் என்ன பெயர் வைத்தார்கள் என்று பேசுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்று கோபமாக பதில் கொடுத்தார்.
கருத்து சொல்கிறோம் என எதையாவது உளறிவிட்டு பின்னர் அதுவே தனக்கு பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்பதால் சித்தார்த் இந்த கேள்வியை தவிர்த்து விட்டார் போலிருக்கிறது.