இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சமுத்திரகனி இப்போது தமிழை விட தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறார். தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய 'புரோ' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் சமுத்திரகனிக்கு படம் இயக்கும் வாய்ப்பும் தேடி வர துவங்கி உள்ளது. தெலுங்கு சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அடுத்து அவர் சிரஞ்சிவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இயக்கிய 'புரோ' படத்தைப் பார்த்துட்டு சிரஞ்சீவி பாராட்டினார். எங்க குடும்பத்துல இருக்கிற எல்லா ஹீரோவையும் இயக்குங்கன்னு சொன்னார். அவரை இயக்க பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அவர் பிசியான நடிகர். எல்லாம் நல்லபடியா நடக்கும் என்று நினைக்கிறேன். பிரபாஸ் நடிக்கிற 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறேன் என்கிறார் சமுத்திரகனி.