நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
'ஜவான்' படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் அட்லீ. தமிழில் விஜய் நடித்த மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க 'ஜவான்' படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஆச்சரியம் பெரும் வெற்றிக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் 'ஜவான்' கூட்டணியை வாழ்த்தி வருகிறார்கள். அவர்களில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனும் ஒருவர். ஷாரூக், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, அட்லீ, அனிருத் என ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு நீளமான பதிவொன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த அனிருத், 'நன்றி எனது சகோதரரே” என்றார். அதற்கு அல்லு அர்ஜுன், “வெறும் நன்றி மட்டும் சொல்லக் கூடாது, எனக்கு சிறந்த பாடல்களும் வேண்டும்,” என்று பதிலளித்தார். அதற்கு 'ரெடி' என அனிருத் கூறியுள்ளார்.
இந்த உரையாடல் மூலம் 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அட்லீ தான் இயக்க உள்ளார். அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதனால், 'அ-அ-அ' கூட்டணி, அதாவது அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் கூட்டணி உருவாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.