கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
'கேஜிஎப் 2' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் கன்னட இயக்குனரா பிரசாந்த் நீல். அப்படத்தை அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் விலை எதிர்பார்த்த விலைக்கு அமையவில்லை என்பதால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் எனச் சொன்னார்கள். இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான இரண்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாம். அவற்றின் விலையால் மட்டுமே படத்தின் மொத்த பட்ஜெட்டும் வந்துவிட்டதாம். தியேட்டர் உரிமை, இதர உரிமைகள் ஆகியவை படத்திற்குக் கூடுதல் லாபம் என்கிறார்கள்.
இந்த முக்கிய சிக்கல்கள் தீர்ந்ததால் படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.