இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மற்றும் புரமோசன்கள் நடைபெற்று வரும் நிலையில், இசை விழா வருகிற 30-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு ஆளும் கட்சி தரப்பு மிரட்டல் விடுத்ததாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், லியோ படத்தின் இசை விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திமுக அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இந்த படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களின் விநியோக உரிமையை தங்களுக்கு கொடுத்தால் மட்டுமே ஆடியோ விழாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திமுக தரப்பு தெரிவித்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அந்த செய்தியை மறுத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள இந்த தகவல் உண்மையில்லை. முற்றிலும் தவறான தகவல் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.