இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் அஞ்சலி. 2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானார்.
தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். இருப்பினும் தமிழில் அடிக்கடி இடைவெளிவிட்டு நடித்ததால் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் போய்விட்டார்.
தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 50வது படமான 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.
அது குறித்து, “கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி” படத்தின் மூலம் எனது 50வது படத்தின் படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில் ஒரு அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக எனது ஏற்றத் தாழ்வுகளில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.