ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் இயக்காமல் இருந்தார். விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருந்த நிலையில் அந்த படம் ட்ராப் ஆனது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. அதை உறுதி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இன்று(செப்., 25) முருகதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன், ‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க நான் காத்திருக்க முடியாது. மிக்க நன்றி சார், மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்,'' என தெரிவித்துள்ளார்.