ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஷால் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்காக கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அப்போது பேசிய விஷால், “ஒரு கோடியிலிருந்து நான்கு கோடி ரூபாய் வரை பட்ஜெட் வைத்துக் கொண்டு படம் எடுக்க வராதீர்கள்,” என்று பேசியிருந்தார். அந்த பேச்சு தற்போது திரையுலகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் விஷால் பேச்சை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போது அவர் சிறிய தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவோம் என்றெல்லாம் பேசியிருந்தார். அப்படிப் பேசிவிட்டு தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஷால், 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படி பேசுவது சரியல்ல என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்பு விஷால் தயாரித்த, நடித்த படங்களின் பட்ஜெட் 20 கோடி வரையிலாவது இருந்திருக்கும். அவ்வளவு செலவு செய்து எடுத்த படங்கள் ஏன் ஓடவில்லை என்பது குறித்தும் அவர் பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள். இது குறித்து திரையுலகத்தில் உள்ள சிலரிடம் பேசிய போது, ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் பட்ஜெட்டில் அல்ல, கதையில்தான் இருக்கிறது என்பது கூட இத்தனை வருடங்கள் ஆன பிறகும் விஷாலுக்குப் புரியாமல் இருக்கிறதே என கொந்தளிக்கிறார்கள்.
விஷால் உடனடியாக அவரது பேச்சை வாபஸ் பெற வேண்டும் என்று பல சிறிய தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள்.