ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அது குறித்த டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்டது போன்ற குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ விழா ரத்தானதால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. லியோ ஆடியோ விழா ரத்தானதின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதுகிறார்கள். அதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அதில், ‛ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி' என்ற வாசகங்களுடன் போஸ்டரை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.