தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், நாடக நடிகர் என இருந்த சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன்பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பன், அண்ணன், காமெடியன், குணசித்ரம் என ஏராளமான படங்களில் நடித்தார். உனக்காக மட்டும், கானல் நீர், நீயே என் காதலி படங்களை இயக்கினார். இதில் கானல் நீர் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு 'பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா இந்த படத்தை இயக்குகிறார். மூன்றரை வயது குழந்தையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில் டிரைவராக சின்னி ஜெயந்த் நடிக்கிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது ஒரு டாக்ஸி டிரைவருக்கும், அவருக்கு கிடைத்த ஒரு 3 வயது குழந்தைக்குமான அன்பை சொல்லும் படமாக உருவாகிறது.