தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமா பின்னணி பாடகியான சின்மயி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து பொறுப்பான தாயாக மாறியுள்ளார். இந்நிலையில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளபதிவில், ‛‛குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபர் எங்கள் காரின் மீது மோதிவிட்டார். காரின் இடது பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த எனது குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோல் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் நபரின் கைகளை உடைக்க வேண்டும் என்றும் கோபமாக பதிவிட்டு, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள்'' என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.