தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது ஹரி இயக்கும் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதில் காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார் யோகி பாபு. அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.
அதோடு, காரைக்குடியில் காரில் சென்றபோது, ஒரு கடையில் முருகன் சிலையை பார்த்த யோகி பாபு, உடனே அதை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். இது ஒரு மறக்க முடியாத பரிசு. ஐ லவ் யூ, நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் விஷால். ஆக்ஷன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகி வரும் இந்த விஷால் 34வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.