ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது ஹரி இயக்கும் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதில் காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார் யோகி பாபு. அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.
அதோடு, காரைக்குடியில் காரில் சென்றபோது, ஒரு கடையில் முருகன் சிலையை பார்த்த யோகி பாபு, உடனே அதை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். இது ஒரு மறக்க முடியாத பரிசு. ஐ லவ் யூ, நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் விஷால். ஆக்ஷன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகி வரும் இந்த விஷால் 34வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.