400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாலயா அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.