சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
விஜய் நடித்து நாளை மறுதினம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள படம் 'லியோ'. இதே டைட்டிலை தெலுங்கில் வேறு ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி படத்தை வெளியிட தடை உத்தரவை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து 'லியோ' படம் தெலுங்கில் வெளியாகுமா என்ற புதிய சர்ச்சை எழுந்தது.
படத்தைத் தெலுங்கில் வெளியிடும் வினியோகஸ்தரான நாகவம்சி படம் திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். “இது தகவல் தொடர்பு சிக்கலால் எழுந்த ஒரு பிரச்சனை, யாரோ ஒருவர் 'லியோ' தெலுங்கு தலைப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் சீக்கிரமாகவே தீர்த்துவிடுவோம். இன்றுதான் நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிய வந்தது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை, சிக்கலில்லாமல் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் 'லியோ' படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது. இப்படி ஒரு தடை உத்தரவு வந்ததும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிக்கலா என அரண்டு போய் உள்ளனர்.