இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை(அக்., 19) 5 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது. இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படக்குழுவினர் தமிழக அரசை நாடியது. ஆனால் அரசு மறுத்துவிட்டது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம். ஆனால் காலை காட்சி 9 மணிக்கு தான் ஆரம்பிக்கணும் என அறிவித்தது.
ஆனால், தயாரிப்பு தரப்போ விடாப்பிடியாக லியோவிற்கு எப்படியாவது காலை காட்சி பெற்று விட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது காலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. வேண்டுமானால் 9 மணி காட்சியை 7 மணிக்கு துவங்கலாம். ஆனால் அதையும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு லியோ தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று அரசு சார்பில் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்ட உத்தரவில், 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அரசாணை வெளியிட்டபடி 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.