சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். கடந்த 11 வருடங்களில் பட்டத்து யானை, பாயும் புலி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக முரளி ஷர்மா உடன் தனது 34வது படத்தில் இணைந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாக விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.