ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து வருகிறவர் சமுத்திரகனி. குறிப்பாக தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடிப்பதோடு, படம் இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயராகும் படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபாகர் ஆரிபா , பிருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்குகிறார். அருண் சிருவேலு இசை அமைக்கிறார், துர்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. விமானம் படத்தின் இயக்குனர் சிவபிரசாத் கதை எழுதியுள்ளார்.
படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பின்னர் படம் குறித்து இயக்குனர் தன்ராஜ் கொரனானி கூறும்போது “அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் கதையாக உருவாகிறது. நவம்பர் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. ஐதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.