கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதில் அமிதாப் பச்சன் நடிப்பதால் 33 ஆண்டுகள் கழித்து அவருடன் நடிக்கும் மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகை லதா, மீனா, நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.