வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. இதற்காக நேற்று ரஜினி 170 வது படத்தின் படக்குழு மும்பை புறப்பட்டு சென்றது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ரஜினியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சந்தித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இர்பான், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான இந்த சந்திப்பு எனக்கு சில படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.