இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு |
இயக்குனர் அட்லீ கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் நான்கு படங்களையும் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான ஜவான் என்கிற படத்தையும் சேர்த்து மொத்தம் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவற்றில் தமிழில் தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே மாறிவிட்டார். இதன் பயனாகத்தான் அவருக்கு பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் அளவுக்கு அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி விட்டார் அட்லீ.
ஜவான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில் தனது மனைவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ராஜகோபாலசாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார் அட்லீ. அதைத்தொடர்ந்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள வேலுக்குடி என்கிற கிராமத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார் அட்லீ. ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு நேர்த்திக்கடனாக அவர் இந்த வழிபாட்டை நடத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.