இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக, 2.O படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர் தனுஷ், உதயநிதி ஆகியோருடன் ஒருசில படங்களில் நடித்த எமி ஜாக்சன், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணமாகி லண்டனில் செட்டில் ஆனார். இந்த நிலையில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய் இயக்கி வரும் அச்சம் என்பது இல்லையே படத்திலேயே ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.
தனது முதல் கணவரை விட்டு பிரிந்து தற்போதைய புதிய பாய் பிரண்டுடன் உற்சாகமாக பொழுதுபோக்கி வரும் எமி ஜாக்சன் அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு விவசாய நிலத்தில் பூசணிக்காயை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எமி ஜாக்சன் அவற்றை தள்ளுவண்டியில் சேகரிக்கும்போது தனது மகனையும் சேர்த்து உட்கார வைத்து தள்ளிவருவது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.