இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் 'நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்'' ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. ஐந்தே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சூர்யாவின் 43வது படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். நஸ்ரியாவின் மாமனார் பாசில் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் சில பல தரமான படங்களைத் தந்தவர்.
“பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் “பூவே பூச்சூடவா, பூ விழி வாசலிலே, வருஷம் 16, காதலுக்கு மரியாதை” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள். விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படம் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம்.
தமிழில் 2005ல் வெளிவந்த 'ஒரு நாள் ஒரு கனவு' படத்துடனும், மலையாளத்தில் 2011ல் வெளிவந்த 'லிவிங் டுகெதர்' படத்துடனும் இயக்குவதை நிறுத்திவிட்டார்.
நடிகை நஸ்ரியா மாமனார் பாசில், கணவர் பகத் பாசில் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாசில் உடல் இளைத்த தோற்றத்தில் இருக்கிறார். இருப்பினும் அவரது முகத்தில் இருக்கும் மலர்ச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அப்புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.