பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா- அரசியல் என்று பயணித்து வரும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக போகிறார்.
இளைய மகள் அனந்திடா, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்க உள்ள 234வது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார். இந்த நிலையில், தனது கணவர் சுந்தர்.சி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் குஷ்பு, என்னுடைய பலம், பலவீனம் மட்டுமின்றி என்னுடைய உலகமும் இந்த மூன்று பேர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.