ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தனுஷ் நடித்திருக்கும் 47வது படம் கேப்டன் மில்லர். அவருடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் பீரியாடிக் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும். தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம், ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.