தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி போலி வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. ஷாரா பட்டேல் என்ற நடிகையின் கவர்ச்சி வீடியோவில் அவரது முகத்தை எடுத்துவிட்டு அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி அந்த போலி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா மந்தனா, தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில், இது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி போலி வீடியோ குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்துக்குள் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.