இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் நடித்து வரும் ரஜினிகாந்த் அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில இளவட்ட இயக்குனர்களிடத்தில் கதை கேட்டார் ரஜினி. அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதையடுத்து இவர்கள் இருவரின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ரஜினியோ, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியிடத்தில் தான் கூறிய அதே சரித்திர கதையை சிம்புவிடத்தில் கூறி ஓகே செய்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. அந்த படம் தான் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் 48வது படமாக உருவாகப் போகிறது. அதோடு இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.