ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170வது படத்தின் நடித்து வரும் ரஜினிகாந்த் அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க உள்ளது. மேலும், ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சில இளவட்ட இயக்குனர்களிடத்தில் கதை கேட்டார் ரஜினி. அவர்களில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி மற்றும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அதையடுத்து இவர்கள் இருவரின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ரஜினியோ, நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரஜினியிடத்தில் தான் கூறிய அதே சரித்திர கதையை சிம்புவிடத்தில் கூறி ஓகே செய்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. அந்த படம் தான் தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்புவின் 48வது படமாக உருவாகப் போகிறது. அதோடு இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.