ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரஜினியின் கேரியரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா தொடர்பு கொண்ட போது, ஒரு பாட்ஷாவே போதும், இரண்டாம் பாகம் வேண்டாம் என்று சொல்லி நடிப்பதற்கு மறுத்து விட்டார்.
இந்த நிலையில் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த படத்தில் ஹீரோவாக விஜய்- அஜித் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாட்ஷா ரீமேக்கில் நடிக்கப் போவது விஜய்யா? அஜித்தா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரஜினியின் பில்லா என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்தார் அஜித்குமார். அந்த ரீமேக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் பாட்ஷாவாக நடிப்பதற்கும் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதனால் ரஜினியின் பில்லாவை தொடர்ந்து பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித்குமாரே நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது.