ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
எந்த கட்சி புதிதாக ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியை குளிரவைக்கும் முகமாக பாராட்டு விழா நடத்துவது தமிழ் திரையுலகின் வழக்கம். அந்த வகையில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாசத் தலைவருக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கும் பிரமாண்ட விழா நடத்தினார்கள். அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வரும், இந்தாள் முதல்வரின் தந்தையுமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
இந்த விழாவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னின்று நடத்துகிறது. பெப்சி அமைப்பில் உள்ள 24 சங்கங்களும் தங்களது பங்களிப்பை செய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று விழா குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். முறைப்படியான அழைப்பும் விடுத்தனர். இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.