ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் 'மை நேம் இஸ் ஸ்ருதி'. ஸ்ரீனிவாஸ் ஓம்கார் இயக்கி உள்ளார். முரளி சர்மா, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி உள்ளது.
ஹன்சிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தியதால் தெலுங்கு படம் பற்றி கவனிக்கவில்லை. அங்கிருந்தும் எனக்கான ஸ்கிரிப்டும் வரவில்லை என்பதும் உண்மை. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்னதும் நடிக்க பயந்தேன். மனிதர்களை கடத்தி அவர்களின் தோலை வியாபாரம் செய்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. எனது தாய் அடிப்படையில் மருத்துவர் என்பதால் அவர் அது உண்மைதான். அது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார். அதன் பிறகே நடித்தேன்.
படத்தில் நான் ஒரு விளம்பர ஏஜென்சி நடத்தும் பெண். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கி விடுகிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறேன். அந்த கும்பலை எப்படி சமூகத்துக்கு அடையாளம் காட்டுகிறேன் என்பதுதான் படத்தின் கதை. எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அது ஹீரோக்கள் போடும் சண்டை போன்று இருக்காது. என் வயது கொண்ட எனது வலிமை கொண்ட ஒரு பெண் எப்படி சண்டையிடுவாளோ அதுபோன்று யதார்த்தமாக இருக்கும். என்றார்.