திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சமீபகாலமாக விஜய் - அஜித் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்குமாறு சில சினிமா பிரபலங்களும் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். இப்படியான நிலையில், இயக்குனர் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சோசியல் மீடியாவில் பலரும் விஷத்தைதான் கக்குகிறார்கள். இது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிடுவது போல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் - அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு விஜய் தான் பிடிக்கும், எனக்கு அஜித்தான் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது கொஞ்சம் கூட சரி இல்லை,'' என்று அந்த பேட்டியில் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்