ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனரான அட்லி, அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கியும் வெற்றி பெற்றார். ராஜா ராணி தொடங்கி ஜவான் படம் வரை அவர் இயக்கிய பல படங்கள் ஏற்கனவே வெளியான சூப்பர் ஹிட் படங்களை காப்பியடித்து இயக்கியதாக தொடர்ந்து அட்லி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அட்லி அளித்துள்ள ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, நான் எந்த ஒரு படத்தையும் காப்பி அடித்து படங்கள் இயக்கியதில்லை. ஆனாலும் நான் இயக்கும் படங்கள் ஏற்கனவே வெளியான படங்களின் சாயல்களில் இருப்பதாக கூறுகிறார்கள். என்னை பொருத்தவரை நான் எடுத்துக் கொள்ளும் கதைக்கு தேவையான காட்சிகளை எனது சொந்த கற்பனையிலேயே உருவாக்கி வருகிறேன். இப்படி நான் நேர்மையான முறையில் படங்களை இயக்கிய போதும் எனது ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும்போதும் என் மீது திட்டமிட்டு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள அட்லி, அடுத்து ஷாருக்கான்- விஜய்யை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான கால நேரம் கைகூடி வரும்போது அந்த படத்தை பிரமாண்டமாக இயக்குவேன். அப்படி நான் இயக்கும் அந்த படம் ஷாரூக்கான் - விஜய் என்ற இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு கதையில் உருவாகும் என்கிறார் இயக்குனர் அட்லி.