பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தீபாவளி வந்து பத்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால், தீபாவளிக்கு வெளிவந்த படங்கள் பத்து நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருப்பது தியேட்டர் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரக் காட்சிகளில் மிகவும் குறைவான ரசிகர்களுடன் தியேட்டர்கள் நடைபெற்று வருகின்றன. இரவுக் காட்சிகளை பெரும்பாலான தியேட்டர்களில் ரத்து செய்யும் நிலைதான் இருக்கிறதாம்.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம்தான் வரவேற்பைப் பெற்றது என்றார்கள். ஆனால், அந்தப் படத்திற்கும் கூட இந்த வாரத்தில் வரவேற்பு இல்லையாம். நாளை மறுதினம் ஏழெட்டு படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் அந்தப் படங்களை ரசிகர்கள் வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தீபாவளி வந்தால் குறைந்தது இரண்டு, மூன்று வாரங்களாவது தியேட்டர்காரர்கள் திருப்தியாக இருப்பார்கள். ஆனால், இந்த வருட தீபாவளி தங்களுக்கு ஏமாற்றமே என அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.