ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'பருத்தி வீரன்' படத்தின் பஞ்சாயத்துதான் கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. தான் கொடுத்த பேட்டி மூலம் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இன்று காலை வெளியிட்ட 'வருத்த' அறிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ?. 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுததி இருந்தால்…' என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன ?.
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?.
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன ?.
பெயரிப்படாத அந்தக் கடிதம் யாருக்கு ?,” என சசிகுமார் சில பல கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், இதற்கு 'கமா' போட்டு தொடர வைத்துள்ளார் சசிகுமார்.