தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது அவரது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. பிரபாஸை ஒரு நல்ல நடிகராக செதுக்கியதில் அவரது நடிப்பு குருவான சத்யானந்த்திற்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தான் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜெயம் ரவி உள்ளிட்டோரையும் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் நடிப்பிற்காக பட்டை தீட்டியவர்.
எப்போதுமே தனது குருவிற்கு உரிய மரியாதையை செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து சத்யானத் பிறந்தநாளில் தவறாமல் அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, “இந்த கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடிகார செயின் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொடுப்பதற்கு கடைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று சற்று விளையாட்டாகவும் கமெண்ட் அடித்துள்ளார்.