தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது அவரது ஒவ்வொரு படமும் பான் இந்தியா படமாக வெளியாகின்றன. பிரபாஸை ஒரு நல்ல நடிகராக செதுக்கியதில் அவரது நடிப்பு குருவான சத்யானந்த்திற்கு முக்கிய பங்கு உண்டு. இவர் தான் பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜெயம் ரவி உள்ளிட்டோரையும் சினிமாவிற்குள் நுழைந்த சமயத்தில் நடிப்பிற்காக பட்டை தீட்டியவர்.
எப்போதுமே தனது குருவிற்கு உரிய மரியாதையை செலுத்தி வரும் நடிகர் பிரபாஸ் தொடர்ந்து சத்யானத் பிறந்தநாளில் தவறாமல் அவரை சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அவரை சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, “இந்த கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடிகார செயின் கொஞ்சம் இறுக்கமாக இருந்தால் அதை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொடுப்பதற்கு கடைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று சற்று விளையாட்டாகவும் கமெண்ட் அடித்துள்ளார்.