விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மா சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா மட்டுமல்லாது அரசியல் குறித்தும் அடிக்கடி கிண்டல் செய்து பதிவுகளைப் போடுவார். குறிப்பாக தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண் ஆகியோரைக் கடுமையாக விமர்சிப்பார்.
நடைபெற்று முடிந்த தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பவன் கல்யாண் கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. இது தெலங்கானாவில் பவனின் அரசியல் வாழ்க்கைக்கு மேலும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆந்திர அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர் பவன் கல்யாண். அடுத்து நடைபெற உள்ள ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, தெலங்கானா அரசியலில் படுதோல்வி அடைந்த பவன் கல்யாண் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்துள்ளார். “கணிதத்தில் ஆர்யபட்டா ஜீரோவைக் கண்டுபிடித்தார். அரசியலில் பவன் கல்யாண் ஜீரோவைக் கண்டுபிடித்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார். இதனால், அவர் மீது பவன் கல்யாண் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.